Showing posts with label books. Show all posts
Showing posts with label books. Show all posts

Saturday, March 21, 2015

”நிலவில் ஒருவன்” - ராஜ்சிவா !

விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அளவே அறிவியல் எழுத்தாளர்களை கொண்டது தமிழ்மொழி. அவர்களுள் முதன்மையானவர் ராஜ்சிவா தான் என்பது ஒரு சாமானிய வாசகனான எனது கருத்து. அறிவியல் தகவல்கள் அவ்வளவாக அண்டாதிருந்த தமிழ் வாசகப்பரப்பை தனது இலகு தமிழிலான விளக்கங்கள் மூலம் ஆக்கிரமித்துக்கொண்டவர் ராஜ்சிவா. ஹிக்ஸ் போசான், அண்டம், குவாண்டம், கருந்துளைகள், பயிர்வட்டம், பறக்கும்தட்டு, மாயன்கள் என்று நாம் மலைத்து பார்த்த சொற்களை எல்லாம், தினமும் அசால்டாக உபயோகிக்கும் அளவுக்கு நம்மிடையே புழக்கத்தில் கொண்டுவந்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. அதுதான் அவரது வெற்றி. இதை எந்தவிதமான பெருமைப்படுத்தல்  நோக்கத்திலும் சொல்லவில்லை. இதுதான் உண்மை. எனக்கும் சரி, தற்போது அறிவில ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும் சரி,  வழிகாட்டி ராஜ்சிவா அண்ணன் தான்.

அறிவியலை கையில் எடுத்துக்கொள்ளும்போது ஒரு சிக்கல் இருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகால மத, மனித நம்பிக்கைகளை அறிவியல் கருத்துக்கள் நிச்சயம் கேள்விக்குட்படுத்தும். அறிவியல் எதையுமே 100% ஆதாரம் இல்லாது ஏற்றுக்கொள்ளாது இல்லையா? அதனால் வெறும் நம்பிக்கைகள் மூலமே தொடர்ந்து வரும் மத கருத்துக்களை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்ளும்? அறிவியலின் கேள்விகளில் பல நம்பிக்கைகள் நிச்சயம் ஆட்டம் காணும். நாம் தீவிரமாக நம்பிய ஒரு கருத்து இலகுவாக உடைபடும்போது அதை உடனடியாக ஏற்றுக்கொள்ள மனித மனம் இடம் தராது. அதனால அறிவியலையும், அறிவியலாளர்களையும் எதிர்க்க ஆரம்பிப்பார்கள் ஒரு பகுதி மக்கள்.  இது நாம் எல்லோருமே வழமையாக கண்டுவரும் அனுபவம்தான். ஆனால் இந்த வழமையை மெதுவாக கையாள்கிறார் ராஜ்சிவா. தொடர்ந்து ராஜ்சிவாவின் எழுத்துக்களை படித்துவருகிறேன். எந்த இடத்திலும் யாரையும் காயப்படுத்தி எழுதியது இல்லை. இவையெல்லாவற்றையும் விட இவரது வெற்றிக்கு இன்னுமோர் காரணம் இருக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள் பலரிடையே இல்லாத பழக்கம் அது. “எளிமை”. எழுத்தாளன் வாசகன் என்ற உறவை கடந்து ஒரு சகோதரனை போலவே எல்லோருடனும் பழகும் அவரது தனிப்பட்ட குணமும் ஒரு சக்சஸ்தான். புத்தகத்தை பற்றி எழுத வந்துவிட்டு எழுத்தாளனை பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்தளவிற்கு ராஜ்சிவா அண்ணனை பிடித்திருக்கிறது :)
Share This:   FacebookTwitterGoogle+

Wednesday, March 4, 2015

குமரி நிலநீட்சி - சு.கி.ஜெயகரன்

தமிழர்களுக்கு என்று ஒரு பொதுப்பண்பு இருக்கிறது. இனம், மொழி சார்ந்த வரலாறுகளை மிகைப்படுத்தப்பட்ட பெருமைகள் மூலம் உணர்ச்சிபூர்வமாக அணுகுதலே அப்பண்பு. இதற்கான காரணத்தை பற்றி குமரி நிலநீட்சி நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள எஸ்.வி.ராஜதுரை குறிப்பிடுகையில், “தங்களது பண்பாட்டு அடையாளமும் வரலாற்று மரபும் மறுக்கப்படும் எந்தவொரு மக்களும், அவற்றை மீட்டெடுக்கவும் வலியுறுத்தவும் முயல்கையில் தம்மைக்குறித்த மிகைக் கற்பனைகளையும் கட்டுக்கதைகளையும் உருவாக்கிக் கொள்வதை காண்கிறோம்” என்கிறார். நிச்சயமான உண்மை அது. மக்களின் இத்தகைய நிலையை ஐரோப்பிய காலனித்துவ ஆட்சி பயன்படுத்திக்கொள்ள,  இன்றைய கருனாநிதி வரை தொடர்ந்து வந்த அரசியல்வாதிகளும் தமது உசுப்பேற்றல் அரசியலுக்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு பிரித்தாளுகை, உசுப்பேற்றுதல் அரசியல் தேவைக்காக உருவாக்கி பெருப்பிக்கப்பட்ட கருத்தாக்கமே இந்த லெமூரியா எனப்படும் குமரிக்கண்டம்.

இந்த குமரிக்கண்டம் என்ற கருத்தாக்கம் எப்படி தோற்றம் பெற்றது என்று ஆராயப்போனால், அங்கு இரண்டு நபர்கள் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். ஏர்ன்ஸ்ட் ஹிக்கல் என்பவர் டார்வினின் கூர்ப்புக்கொள்கையை கொண்டு ஒரு ஊகத்தை வெளியிடுகிறார். அது என்னவென்றால் “குரங்கிலிருந்து வந்தவன் மனிதன். குரங்கிற்கும் மனிதனுக்கும் இடையிலான வித்தியாசம் “பேச்சு”. அப்படியாயின் இந்த இரண்டு உயிரினங்களுக்கிமிடையில் பேச்சற்ற மனிதக்குரங்கு ஒன்று இருந்திருக்கவேண்டும்” என்பதே அது. தனது ஊகத்தை உண்மை என்று நிரூபிக்க அந்த உயிரினத்துக்கு பித்தகேந்த்ரோபஸ் என பெயரிட்டு, அந்த உயிரினத்தின் வரைபடங்கள் என தன் கற்பனைகளை வடிவங்களாக்கி வெளியிடுகிறார் ஹிக்கல். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த உயிரினங்கள் அழிந்துபோன கண்டம் ஒன்றில் வாழ்தவை என புளுகுமூட்டையை அளந்துவிடுகிறார். இறுதியில் பத்திரிகையாளர்களிடம் மாட்டுப்பட்டு தன் குளறுபடிகளை ஒத்துக்கொள்கிறார். அவர் ஒத்துக்கொண்டாலும் அவரை அறிவியல் மேதை என நம்பும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்தது.
Share This:   FacebookTwitterGoogle+

Thursday, February 26, 2015

உலக சினிமாவும் தமிழ் அடையாளமும் - கௌதம சித்தார்த்தன்


திரைப்படங்களை பொழுதுபோக்கு என்ற ஓர் தளத்தினூடாக மட்டும் அணுகிவிடமுடியாது. இயக்குனரும் சரி ரசிகனும் சரி ஒரு திரைப்படத்தை, அதன் பின்னால் கட்டமைக்கப்பட்டுள்ள கலை, இலக்கியம், சமூகம், அரசியல் என்ற பல்தளத்தினூடாக தரிசிக்கவேண்டும். வெகுஜன சினிமா என்ற போர்வையில் நுழைந்துகொள்ளும் அபத்த சிந்தனைகளை இத்தகைய பார்வையொன்றின் மூலமே பிரித்தரிய முடியும். அந்த கடமையைத்தான் இந்த தொகுப்பிலுள்ள 10 விமர்சனங்கள் மூலம் முன்னெடுத்திருக்கிறார் கௌதம சித்தார்த்தன்.
Share This:   FacebookTwitterGoogle+

Blog Archive

Followers

Powered by Blogger.
Copyright © சிறகுகள் |