என்ன வேலையாக இருந்தாலும் வாரத்தில் ஒரு தடவை கொத்துரொட்டி சாப்பிடுவதற்காக நண்பர்களுடன் புறப்பட்டுவிடுவது வாடிக்கையாகிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு போதையாகவே ஆகிவிட்டது இந்த கொத்துரொட்டி மோகம். நம்ம நண்பர்கள் அனைவரும் கொத்துரொட்டி பிரியர்கள் என்பதாலும் வாரத்துக்கு ஒருவர் என்ற ரீதியில் கொத்துரொட்டிக்கு ஸ்பான்ஸர் பண்ணுவதாலும் இன்றுவரை வெற்றிகரமாக தொடர்கிறது எங்கள் கொத்துரொட்டி பயணம் :) வெற்றிகரமாக என்றாலும் அவ்வப்போது சில சிக்கல்களையும், சில இலியானா சிக்கன்காரர்களையும் சந்திப்பதும், அதன் பின்னர் கொத்துரொட்டியே வேண்டாம் என்று முடிவெடுப்பதும், வாரமுடிவில் தீர்மாணத்தை மாற்றி புதிய கொத்துரொட்டி கடை தேடுவதும் வழமை. சேட்டை படம் பார்த்தவர்களுக்கு இலியானா சிக்கன் என்றால் என்ன என்று புரிந்திருக்கும் :)
Showing posts with label Social. Show all posts
Showing posts with label Social. Show all posts
Friday, June 28, 2013
கொத்துரொட்டி - Time to lead
Posted under Social, அனுபவம், கொத்துரொட்டி, பதிவுகள் on 12:24 PM by Mathuran with
8 comments
Friday, February 3, 2012
கல்கி என்னும் அற்புதம் என்னை கட்டிப்போட்ட மாயம்
Posted under Social, பதிவுகள் on 11:18 PM by Mathuran with
19 comments
”கல்கி” உண்மையிலே ஒரு அற்புதம் தான். 12 வயதில் ஆரம்பித்த கல்கி மோகம் இன்று வரை மூன்று நாவல்கலுடன் சுற்றிசுழன்றுகொண்டிருக்கிறது. வரிக்கு வரி வாசகர்களை கட்டிப்போடும் ஒரு ஆற்றல் நூற்றுக்கு நூறுவீதம் அமையப்பெற்றவர் என்றால் அது கல்கிதான். 12 ஆவது வயதிலேயே கல்கி என் மீது ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை வேறு நூல்களை அதிகம் நாடவிடாது கல்கி என்ற ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றவிட்டதுதான்.
முதன்முதலில் நான் படித்த கல்கியின் வரலாற்று நாவல் “பொன்னியின் செல்வன்”. அது ஒரு தற்செயலான சம்பவம் என்றுதான் சொல்லவேண்டும். அப்போது நாங்கள் வேலணையில் இருந்தோம். எங்கள் சித்தி யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். அவர் வீட்டை காலி செய்தபோது நானும் கூடவே இருந்தேன். அப்போது சித்தி பல பழைய புத்தகங்களை எடுத்து வீட்டின் ஒரு மூலையில் போட்டுவிட்டு “ இந்த பழைய புத்தகங்களை மாநகரசபை குப்பை வண்டி வரும்போது அதில் ஏற்றிவிடுவோம்” என்று சொன்னார். அப்போது நான் சின்ன பையன் தானே. என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்போம் என அந்த புத்தகக்கட்டை, சித்தியின் பேச்சுகளுக்கிடையில் கிளறிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு கதைப்புத்தகம் கண்ணில் பட்டது. முன்புறமும் பின்புறமும் அட்டைகள் இல்லாமல் பல பக்கங்கள் கறையான் அரிக்கப்பட்டு இருந்தது. ஏதோ ஒரு கதைப்புத்தகம்.. படிக்கலாம் என்று எடுத்து வைத்துக்கொண்டேன்.
முதன்முதலில் நான் படித்த கல்கியின் வரலாற்று நாவல் “பொன்னியின் செல்வன்”. அது ஒரு தற்செயலான சம்பவம் என்றுதான் சொல்லவேண்டும். அப்போது நாங்கள் வேலணையில் இருந்தோம். எங்கள் சித்தி யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். அவர் வீட்டை காலி செய்தபோது நானும் கூடவே இருந்தேன். அப்போது சித்தி பல பழைய புத்தகங்களை எடுத்து வீட்டின் ஒரு மூலையில் போட்டுவிட்டு “ இந்த பழைய புத்தகங்களை மாநகரசபை குப்பை வண்டி வரும்போது அதில் ஏற்றிவிடுவோம்” என்று சொன்னார். அப்போது நான் சின்ன பையன் தானே. என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்போம் என அந்த புத்தகக்கட்டை, சித்தியின் பேச்சுகளுக்கிடையில் கிளறிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு கதைப்புத்தகம் கண்ணில் பட்டது. முன்புறமும் பின்புறமும் அட்டைகள் இல்லாமல் பல பக்கங்கள் கறையான் அரிக்கப்பட்டு இருந்தது. ஏதோ ஒரு கதைப்புத்தகம்.. படிக்கலாம் என்று எடுத்து வைத்துக்கொண்டேன்.
Friday, January 6, 2012
வாத்தியார் பொண்ணுக்கு கலியாணமாம்!!
Posted under Social, srilanka, ஈழம், சமூகப் பார்வை, சிறுகதை on 11:02 PM by Mathuran with
13 comments
முன்குறிப்பு : இந்த சிறுகதை நான் பதினோராம் தரம் படிக்கும்போது ஒரு சிறுகதை போட்டிக்காக "வறுமையின் கோடுகள்” எனும் தலைப்பில் எழுதியது. அதிலும் காமடி என்னென்றா அந்த போட்டியில நான் மட்டும்தான் பங்குபற்றியிருக்கிறன் போல.... ஏனென்றா இந்த கதைக்குத்தான் மாவட்ட மட்டத்தில் முதலிடம்.. ஹி ஹி. பழைய பெட்டிகளை தட்டும்போது கிடைத்தது.. அப்பிடியே பதிவிட்டுட்டேன்........
---------------------------------------------------------------------------------------------------------------------
இன்று வழக்கின் இறுதி நாள். சுந்தரம்பிள்ளை மாஸ்டருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. குற்றவாளிக்கூண்டு அவருடைய நாற்பது வருடகால ஆசிரியப்பணியின் செல்வாக்கை, கௌரவத்தை விழுங்கிக்கொண்டிருந்தது. “குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கும் நிலையில் உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது மிஸ்டர் சுந்தரம்பிள்ளை. உங்கள் சார்பில் வாதாட யாரும் வக்கீல் உள்ளார்களா?
---------------------------------------------------------------------------------------------------------------------
இன்று வழக்கின் இறுதி நாள். சுந்தரம்பிள்ளை மாஸ்டருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. குற்றவாளிக்கூண்டு அவருடைய நாற்பது வருடகால ஆசிரியப்பணியின் செல்வாக்கை, கௌரவத்தை விழுங்கிக்கொண்டிருந்தது. “குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கும் நிலையில் உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது மிஸ்டர் சுந்தரம்பிள்ளை. உங்கள் சார்பில் வாதாட யாரும் வக்கீல் உள்ளார்களா?
நீதிபதியின் ஒவ்வொரு சொற்களும் ஒவ்வொரு ஈட்டியாக அவரது காதுகளில் நுழைந்தது. பாவம்... அவர் என்ன செய்வார்! செய்யாத குற்றத்திற்காக அவர் தண்டனை அனுபவிக்கப்போகிறார். அவர் மனம் அவர் குடும்பத்தினரை எண்ணி கலங்கியது. அவருடைய சிறு வருமானத்தை மட்டுமே நம்பி, சிறு வயதிலேயே தாயை இழந்த திருமண வயதை அடைந்த மூன்று பெண்பிள்ளைகள் .... நினைக்க நினைக்க சுந்தரம்பிள்ளை மாஸ்டருக்கு தலை சுற்றியது. “என் சார்பில் வாதாட யாரும்.......” சொல்ல வாயெடுத்தார் மாஸ்டர்..
Thursday, October 13, 2011
மானம் மலிவு விற்பனை : இலங்கை தமிழ் இணைய ஊடகங்கள்
Posted under Social, இணையம், ஈழம், சமூகப் பார்வை, தமிழ் ஊடகங்கள், பதிவுகள் on 9:55 PM by Mathuran with
77 comments
இன்று யாழ்ப்பாணம் என்றாலே கலாச்சார சீரழிவுகளின் மைய நகரம் என்ற ஒரு கருத்து மாயை உலக மக்கள் மத்தியிலே தோன்றியுள்ளது. யாழ் மக்களை மதித்தவர்கள் இப்போது கேவலமாக பார்க்கத்தொடங்கியுள்ளார்கள். இந்த பெருமையெல்லாம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இப்போது வெளியில் இருந்து இயங்கும் நடுநிலைவாத, நேர்மையான, யாழ் மக்களின் கலாச்சாரத்தின் தாங்கு தூண்களான தம்மை கூறும் சில தமிழ் இணைய ஊடகங்களையே சாரும்.
ஊடகம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. அதிலும் இணைய ஊடகங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அப்படிப்பட்ட சக்திவாய்ந்த ஊடகங்கள் சிறுபிள்ளைத்தனமானவர்களின் கைகளுக்கு சென்றால் என்ன நடக்கும் என்பது, சமீப காலத்திய யாழ் தமிழ் இணைய ஊடகங்களின் செய்ற்பாடுகள் மூலம் புலனாகிறது.
Friday, August 12, 2011
வாலைச் சுருட்டும் ஜெயலலிதாவை பாராட்டலாமா?
Posted under Social, அரசியல், ஈழம், சமூகப் பார்வை, தமிழ்நாடு, பதிவுகள், ஜெயலலிதா on 3:44 PM by Mathuran with
42 comments
வணக்கம் நண்பர்களே
குறிப்பு: இது ஒரு எதிர்ப்பதிவு, நண்பர் துஷியந்தன் எழுதிய பாராட்டலாமே ஜெயலலிதாவை என்னும் பதிவுக்காக அவரது அனுமதியுடன் எழுதப்படுகின்றது
தமிழகத்தில் கொஞ்சக்காலமாகவே கருணாநிதி அலை ஓய்ந்து ஜெயலலிதாப்புயல் வீச ஆரம்பித்துள்ளது. பலரும் ஜெயலலிதாவை ஆதரித்தும் அவருக்கு எதிராகவும் தம் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள். ஒரு சாரர் ஜெயலலிதா திருந்திவிட்டார், நல்லது செய்கிறார் எனவும் மற்றொரு சாரர் இல்லையில்லை ஜெயலலிதா திருந்தவில்லை எனவும் தம் கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.



