Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Monday, January 21, 2019

ஈழசினிமாவின் மாற்று சிந்தனைகள் குறித்த உரையாடல் - சதாபிரணவனை முன்வைத்து !

இலங்கை தமிழ் சினிமா அதன் படைப்பு நிலை சார்ந்தும், அரசியல் சார்ந்தும் நீண்ட விவாதங்களையும் உரையாடல்களையும் வேண்டி நிற்கும் நேரம் இது.  போருக்கு முன்னரான காலம், விடுதலைப்புலிகளின் நிதர்சனம், போருக்கு பிந்தைய காலம் என மூன்று காலப்பகுதிகளில் மூன்று வேறுபட்ட தன்மைகளுடன் இலங்கை தமிழ் சினிமாவின் பரிமானம் அமைந்திருந்தாலும் எமது அயல் சினிமாவான சிங்கள சினிமாவோடு ஒப்பிடுகையில் பாரியதொரு தேக்க நிலையை எமது சினிமா கொண்டிருப்பதை அவதானிக்க முடியும்.

விடுதலைப்புலிகளின் காலத்தில் எழுந்த சினிமாக்கள் எமது தனித்துவமான அடையாளங்களை கொண்டிருந்தாலும், பெரும்பாண்மையாக புலிகளின் போராட்டம் தொடர்பான பிரச்சார திரைப்படங்களாகவே அமைந்துபோனதால் அது எமது சமூகத்தை தாண்டியோ அல்லது புலிகளின் காலத்தை தாண்டியோ நிலைபெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியதாகிற்று. அதே நேரம் புலிகளுக்கு முந்தைய, பிந்தைய கால சினிமாக்கள் தென்னிந்திய சினிமாவின் இலங்கை மீள்பதிவாகவே வந்துகொண்டிருக்கும் அவலம்தான் நடந்தது, நடந்துகொண்டிருக்கிறது. 

பெரும்பாண்மையானதொரு இளைஞர் சமூகம் சினிமா குறித்த பிரக்ஞைகள் அற்று தென்னிந்திய அபத்தங்களை மீள் பதிப்பு செய்துகொண்டிருக்கும் இதே இலங்கை தமிழ் சினிமா களத்தில், அவற்றிலிருந்து முற்றிலுமாக விலகி, சினிமா பற்றிய தெளிவான கருதுகோள்களுடன் எமது கதைகளை எமது சமூகத்தை தாண்டியும் கொண்டு செல்லும் கலைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களது சினிமா குறித்த கருதுகோள் என்னவாக இருக்கிறது, சினிமாவை எப்படி முன்நகர்த்திச் செல்கிறார்கள் என்ற கேள்விகள் மூலமாக எமது உரையாடலை முன்னெடுத்து செல்வது என்பது காத்திரமானதொரு நிகழ்வாக இருக்கும்.

சதா பிரணவன்

புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்ட சதாபிரணவனின் இயற்பெயர் சிவகாந்தன். சதாசிவம் என்ற தந்தையின் பெயரையும் பிரணவசொரூபி என்ற தாயின் பெயரையும் இணைத்து சதாபிரணவன் ஆகியிருக்கிறார். போர்க்காலத்தில் புலம்பெயர்ந்து பிரான்ஸ் செல்லும் சதாபிரணவனின் கவனத்தை சினிமா ஈர்த்துக்கொள்கிறது.  இயல்பிலேயே சினிமா மீது தீவிர நாட்டம் கொண்டவர்  சதா. அத்தகையதொரு சினிமா மோகமும், ஐரோப்பிய நாடுகளில் இலகுவாக கைவசமான தொழில்நுட்ப வசதிகளும் சினிமா துறையில் சதாபிரணவனது நுழைவை இலகுவாக்கிவிடுகின்றன. அவரது சினிமாத்துறையின் ஆரம்பம் என்பது சினிமா மீது கொண்ட தீவிரமான மோகத்தால் மாத்திரமே நிகழ்கிறது. தான் சார்ந்த சமூகத்தின் கதைகளை வெளி உலகிற்கு சொல்லும் ஊடகமாக சினிமாவை பாவிக்கவேண்டும் என்ற இலக்கு அதன் பின்னரான காலத்திலேயே அவரது எண்ணக்கருவாக வளர்கிறது. சதாபிரணவனின் குறும்படங்களில் இந்த வளர்ச்சி போக்கினை அவதானிக்கமுடியும். அந்தவகையில் சதாபிரணவனிடம் சினிமா பற்றிய தெளிந்த சிந்தனையும், நேர்மையும் இருக்கிறது. அதுவே அவரை சிறந்ததொரு படைப்பாளிக்கான பாதையில் இட்டுச்செல்வதையும் மறுக்கமுடியாது.

தன்னை சுற்றியுள்ள மக்களின் வாழ்வியலை, அரசியலும் போரும் அவர்களின் வாழ்வில் செலுத்தும் தாக்கங்களை கதைகளாக சொல்கிறார் இவர். புலம்பெயர்ந்து வாழும் இளைஞர் சமூகத்தில் தற்போது ஏற்பட்டு வரும் குறும்பட மோகம் பற்றி பேச விளைந்த இவரது “தினப்பயணம்” குறும்படம் அந்த ஒற்றை கதையினூடே, வழிப்பறிகள் குறித்து தினம் தினம் பயந்துகொண்டே பயணம் செய்யும் நம் மக்களின் அவலங்களையும், அந்த நேரத்திலும் தம்மிடையேயான அரசியல் வேறுபாடுகளால் பிளவுண்டு கிடப்பதையும் எள்ளலாக காட்சிப்புலத்தில் கொண்டுவருகிறது. அதேபோல ஈழத்தில் சித்திரவதைக்குள்ளான ஒரு இளைஞனும், அவனை சித்திரவதைக்குள்ளாக்கிய ஒட்டுக்குழுவை சேர்ந்தவன் ஒருவனும் நீண்ட இடைவெளியின் பின் புலம்பெயர் நாடொன்றில் சந்தித்துக்கொள்ளும் நிகழ்வையும், அவர்களுக்கிடையிலான உணர்வு வெளிப்பாட்டையும் அற்புதமாக காட்சிப்படுத்திய “போராளிக்கு இட்ட பெயர்” முதலான குறும்படங்கள் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களிடையே நிகழும் அவலங்களையும், அரசியல்களையும் திரைப்படைப்பாக வெளிக்கொண்டு வருகின்றன. ஈழத்தில், இராணுவத்தின் பிடியிலிருக்கும் குடும்பம் ஒன்று அனுபவிக்கும் கொடூர நிகழ்வொன்றை காட்சிப்புலத்தில் கொண்டு அதனூடே ஒட்டுமொத்த போரின் அவலங்களையும் நிமிட நேரத்தில் பதிவுசெய்து சென்ற “God is Dead” குறும்படம் சதாபிரணவனின் படைப்புக்களில் ஆகச்சிறந்த படைப்பாக அடையாளம் காணப்பட்டது. ஆக, எமது மக்களை பாதிக்கும் அரசியல், எமது மக்களுக்கிடையே நிகழும் அரசியல் ஆகியவையே சதாபிரணவனது கதையின் மையப்பொருளாக இருப்பதை காணலாம். 

குறும்படங்களுக்காக கதைகளை தெரிவுசெய்யும் முறையில் தேர்ந்ததொரு இயக்குனருக்கான பாங்கினை அவதானிக்கமுடியும். ”பல கதைகளின் கரு எப்போதும் தோன்றிக்கொண்டேதான் இருக்கும் சில தினங்கள் கூட நிலைகாமல் போனவை பல அதில் அடங்கும்” என சொல்லும் சதாபிரணவன் தனது அனுபவத்திலிருந்து ஒரு நிகழ்வை இவ்வாறு சொல்கிறார். “அந்த அந்த கால மனநிலையை பொறுத்தே ஒரு கதை உருப்பெறுகிறது. உதாரணமாக "இன்றிருப்பத்தேழு" கதை அந்த காலகட்டத்தின், எனது மனச்சிதைவின் பதிவு .அந்த பதிவை குறும்படம் என்று கூட சொல்லமுடியாது.ஒரு படைப்பாளியாக எனக்கு முக்கியமாக இருந்தாலும் அது ஒரு பதிவு அவ்வளவுதான்.”

தான் சார்ந்த சமூகத்தின் போராட்டம் குறித்து எவ்வித அக்கறையுமற்று வாழும் வெளிநாட்டு குடும்பம் ஒன்றின் கதையை சொன்ன “விடுதலை” குறும்படத்தோடு ஆரம்பித்து இதுவரை ஏழு குறும்படங்களை இயக்கியுள்ளார் சதா. இவற்றில் God is dead குறும்படம் பிரான்ஸ் மொபைல் குறும்பட போட்டி மற்றும் கொரியா மொபைல் குறும்பட போட்டி ஆகியவற்றில் சிறந்த குறும்படமாக முதலிடம் பெற்றுக்கொண்டது. சினிமாவை வெறுமனே பொழுதுபோக்கு ஊடகமாக கடந்துபோய்விடக்கூடாது, எமது கதைகளை சர்வதேசத்திடம் சொல்வதற்குரிய காத்திரமான ஊடகமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற சதாபிரணவனின் கனவுக்கு கிடைத்த முதல் வெற்றி அது. 

தனது கதைகளோடு, வேறு எழுத்தாளர்களின் கதைகளையும் குறும்படமாக இயக்குவதற்கு தயங்குவதில்லை சதாபிரணவன். செரஸ் குறும்படத்தின் மூலம் எழுத்தாளர் ஷோபாசக்தியோடு இணைந்து பணியாற்றியுள்ளார். ஷோபாசக்தியின் கதை ஒன்றை திரைப்படமாக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

சதாபிரணவனுக்கு எந்தவொரு கட்சியோ இயக்கமோ சாராத தெளிந்ததோர் அரசியல் பார்வை உண்டு. அது முற்று முழுதாக மக்கள் நலன்சார்ந்த அரசியல். இயக்க உள்முரன்பாடுகளை பேசி, தீவிர தமிழ் தேசியவாதிகளின் விமர்சனத்துக்குள்ளான  “போராளிக்கு இட்ட பெயர்” குறூம்படத்தையும், அதே தேசியவாதிகளால் பாராட்டப்பட்ட God is Dead என்னும் பின் போர்ச்சூழல் குறும்படம் ஒன்றையும் சதாபிரணவனால் கொடுக்கமுடிகிறது என்றால் அது அவரது மக்கள் நலன்சார்ந்த அரசியல் பார்வையி வெளிப்பாடாகவே இருக்கமுடியும். இந்த அரசியல்தான் தீவிர புலி எதிர்ப்பாளரான ஷோபாசக்தியோடு இணைந்து வேலை செய்யவும், அதேநேரம் அவரால் “புலிக்குட்டி” என அழைக்கப்படுவதுமானதொரு சூழ்நிலையை சதாபிரணவனுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

குறும்படங்கள் மூலம் குறிப்பிடத்தக்கதொரு மாற்றத்தை ஈழசினிமாவில் நிகழ்த்திக்கொண்டிருந்த சதாபிரணவன் விரைவில் முழுநீள திரைப்படங்களை இயக்கவுள்ளார். மிக நீண்டதொரு மாற்றத்தையும் சக கலைஞர்களுக்கு கற்றுக்கொள்வதற்கான இடைவெளிகளையும் அவரது திரைப்படங்கள் ஏற்படுத்தும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

புதியசொல் சஞ்சிகைக்காக
மதுரன் ரவீந்திரன்

Share This:   FacebookTwitterGoogle+

Wednesday, September 4, 2013

துலைக்கோ போறியள் - ஈழத்து குறும்பட விமர்சனம்


ஈழத்து பேச்சுவழக்கில் பிரபலமான, ஆனால் தற்போது அருகிவரும் ஒரு சொல், “துலைக்கோ போறியள்”.  ஒருவர் புறப்படும்போது அல்லது எங்கேயாவது சென்றுகொண்டிருக்கும்போது “எங்கே போறீங்க?” என்று கேட்பது அபசகுனம் என்பதற்காக, அச்சொல்லுக்கு பதிலாக உபயோகிக்கப்படும் மங்களச் சொல்லே “துலைக்கோ போறியள்”. கிட்டத்தட்ட இன்றைய சந்ததியினரிடத்தில் அருகிப்போய்விட்ட இந்த சொல்லை தலைப்பாக கொண்டு மதி.சுதாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது “துலைக்கோ போறியள்” குறும்படம். 

Share This:   FacebookTwitterGoogle+

Friday, January 6, 2012

வாத்தியார் பொண்ணுக்கு கலியாணமாம்!!

முன்குறிப்பு : இந்த சிறுகதை நான் பதினோராம் தரம் படிக்கும்போது ஒரு சிறுகதை போட்டிக்காக "வறுமையின் கோடுகள்” எனும் தலைப்பில் எழுதியது. அதிலும் காமடி என்னென்றா அந்த போட்டியில நான் மட்டும்தான் பங்குபற்றியிருக்கிறன் போல.... ஏனென்றா இந்த கதைக்குத்தான் மாவட்ட மட்டத்தில் முதலிடம்.. ஹி ஹி. பழைய பெட்டிகளை தட்டும்போது கிடைத்தது.. அப்பிடியே பதிவிட்டுட்டேன்........ 
---------------------------------------------------------------------------------------------------------------------
இன்று வழக்கின் இறுதி நாள். சுந்தரம்பிள்ளை மாஸ்டருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. குற்றவாளிக்கூண்டு அவருடைய நாற்பது வருடகால ஆசிரியப்பணியின் செல்வாக்கை, கௌரவத்தை விழுங்கிக்கொண்டிருந்தது. “குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கும் நிலையில் உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது மிஸ்டர் சுந்தரம்பிள்ளை. உங்கள் சார்பில் வாதாட யாரும் வக்கீல் உள்ளார்களா?

நீதிபதியின் ஒவ்வொரு சொற்களும் ஒவ்வொரு ஈட்டியாக அவரது காதுகளில் நுழைந்தது. பாவம்... அவர் என்ன செய்வார்! செய்யாத குற்றத்திற்காக அவர் தண்டனை அனுபவிக்கப்போகிறார். அவர் மனம் அவர் குடும்பத்தினரை எண்ணி கலங்கியது.  அவருடைய சிறு வருமானத்தை மட்டுமே நம்பி, சிறு வயதிலேயே தாயை இழந்த திருமண வயதை அடைந்த மூன்று பெண்பிள்ளைகள் .... நினைக்க நினைக்க சுந்தரம்பிள்ளை மாஸ்டருக்கு தலை சுற்றியது. “என் சார்பில் வாதாட யாரும்.......” சொல்ல வாயெடுத்தார் மாஸ்டர்..

Share This:   FacebookTwitterGoogle+

Thursday, October 13, 2011

மானம் மலிவு விற்பனை : இலங்கை தமிழ் இணைய ஊடகங்கள்

இன்று யாழ்ப்பாணம் என்றாலே கலாச்சார சீரழிவுகளின் மைய நகரம் என்ற ஒரு கருத்து மாயை உலக மக்கள் மத்தியிலே தோன்றியுள்ளது. யாழ் மக்களை மதித்தவர்கள் இப்போது கேவலமாக பார்க்கத்தொடங்கியுள்ளார்கள். இந்த பெருமையெல்லாம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இப்போது வெளியில் இருந்து இயங்கும் நடுநிலைவாத, நேர்மையான, யாழ் மக்களின் கலாச்சாரத்தின் தாங்கு தூண்களான தம்மை கூறும் சில தமிழ் இணைய ஊடகங்களையே சாரும்.

ஊடகம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. அதிலும் இணைய ஊடகங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அப்படிப்பட்ட சக்திவாய்ந்த ஊடகங்கள் சிறுபிள்ளைத்தனமானவர்களின் கைகளுக்கு சென்றால் என்ன நடக்கும் என்பது, சமீப காலத்திய யாழ் தமிழ் இணைய ஊடகங்களின் செய்ற்பாடுகள் மூலம் புலனாகிறது.


Share This:   FacebookTwitterGoogle+

Friday, August 12, 2011

வாலைச் சுருட்டும் ஜெயலலிதாவை பாராட்டலாமா?

வணக்கம் நண்பர்களே

குறிப்பு: இது ஒரு எதிர்ப்பதிவு, நண்பர் துஷியந்தன் எழுதிய பாராட்டலாமே ஜெயலலிதாவை என்னும் பதிவுக்காக அவரது அனுமதியுடன் எழுதப்படுகின்றது

தமிழகத்தில் கொஞ்சக்காலமாகவே கருணாநிதி அலை ஓய்ந்து ஜெயலலிதாப்புயல் வீச ஆரம்பித்துள்ளது. பலரும் ஜெயலலிதாவை ஆதரித்தும் அவருக்கு எதிராகவும் தம் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள். ஒரு சாரர் ஜெயலலிதா திருந்திவிட்டார், நல்லது செய்கிறார் எனவும் மற்றொரு சாரர் இல்லையில்லை ஜெயலலிதா திருந்தவில்லை எனவும் தம் கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். 

உண்மையிலேயே ஜெயலலிதா திருந்திவிட்டாரா?
இனிமேல் முதலமைச்சர் என்ற வகையில் ஊழல்கள் அற்ற நல்லதொரு ஆட்சியை கட்டியமைப்பாரா? என்று நோக்கினால், என்னைப்பொறுத்தவரை அதற்கான விடை பூஜ்ஜியம் என்பதே. காரணம் அவரது கடந்தகால ஆட்சி நடைமுறைகள், இந்த தேர்தலுக்கு முன்னரான அவரது செயற்பாடுகள்.

Share This:   FacebookTwitterGoogle+

Blog Archive

Followers

Powered by Blogger.
Copyright © சிறகுகள் |