Monday, January 21, 2019

ஈழசினிமாவின் மாற்று சிந்தனைகள் குறித்த உரையாடல் - சதாபிரணவனை முன்வைத்து !

இலங்கை தமிழ் சினிமா அதன் படைப்பு நிலை சார்ந்தும், அரசியல் சார்ந்தும் நீண்ட விவாதங்களையும் உரையாடல்களையும் வேண்டி நிற்கும் நேரம் இது.  போருக்கு முன்னரான காலம், விடுதலைப்புலிகளின் நிதர்சனம், போருக்கு பிந்தைய காலம் என மூன்று காலப்பகுதிகளில் மூன்று வேறுபட்ட தன்மைகளுடன் இலங்கை தமிழ் சினிமாவின் பரிமானம் அமைந்திருந்தாலும் எமது அயல் சினிமாவான சிங்கள சினிமாவோடு ஒப்பிடுகையில் பாரியதொரு...
Share This:   FacebookTwitterGoogle+

Wednesday, June 20, 2018

ஞாபகச்சுவரில் அடுக்கப்படும் நிகழ்காலக்குறிப்புகள்

வயலின் இசைத்துக்கொண்டிருக்கிறது. சுற்றிலும் பெய்துகொண்டிருந்த மழையிலிருந்து கடற்காற்றின் வாசனை வீசுகிறது. பொழிந்துகொண்டிருந்த நீரின் ஓசையை ஊடறுத்து வயலின் இசைக்கிறது. மெல்ல மெல்ல மழையின் ஒலி அமிழ்ந்துபோக வயலின் மிதந்து பரவுகிறது. ஒன்றரை வயதில் இது நடந்திருக்கலாம். ரெண்டாம் குறுக்குத்தெருவில் வசித்ததாக இப்போது ஞாபகம். சித்தப்பா வந்து கப்பல் வந்திருப்பதாக சொல்கிறார். பார்க்கவேண்டும் என்று அடம்பிடித்து...
Share This:   FacebookTwitterGoogle+

Sunday, October 8, 2017

சாவகச்சேரி to விசுவமடு - பயணக்கட்டுரை

”சாவகச்சேரியில் இருந்து விசுவமடுவரை சைக்கிள் பயணம் போகப்போகிறோம். விரும்பியவர்கள் இணைந்துகொள்ளுங்கள்” என்ற குமணனின் பேஸ்புக் பதிவை பார்த்ததுமே ”நாங்களும் போவமாடா..?” என்றான் கிரி. யோசிக்காமல் சரி என்றேன். எந்தவித முன்யோசனைகளும் இல்லாமல் எடுத்த முடிவு அது. இருந்தாலும் பயணம் தொடங்கிய வெள்ளிக்கிழமை காலை வரை நாம் போவது உறுதியற்றதாகவே இருந்தது. கிரி திடீரென்று வரவில்லை என்பான். பின்...
Share This:   FacebookTwitterGoogle+

Monday, August 8, 2016

சில காதல் கதைகள் - குறுங்கதை

ஆறுமணி ஆகியிருந்தது. கோட்டைப்பகுதி சற்று பரபரப்பாகவே இயங்கிக்கொண்டிருந்தது. ஆறு ஏழு இளம் குடும்பங்கள், உடற்பயிற்சி செய்யும் ராணுவ வீரர்கள், நடைப்பயிற்சி செய்யும் யாழின் கொழுத்த குடும்பத்து மூத்தவர்கள சிலர் என மனிதர்கள் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். எட்டு வயது மதிக்கத்தக்க வாடலான சிறுமியொருத்தி தன் தங்கையை இடுப்பில் சுமந்தபடியே கச்சான் சரைகளை ஐம்பது ரூபாவுக்கு விற்க...
Share This:   FacebookTwitterGoogle+

Monday, July 4, 2016

தொகுப்பின் திறமையினால் படைப்புகளுக்கு மெருகூட்டியவர் மதுரன் ரவீந்திரன் !

“முழு நீளத் திரைப்படமானாலும் சரி அல்லது குறும்படமானாலும் சரி அவற்றின் திரைக் கதையானது அதன் தயாரிப்பில் இரண்டு நிலைகளில்தான் முழுமைபெறுவதாக நான் கருது கிறேன். ஒன்று இயக்குனரின் மேசையில். மற்றையது படத்தொகுப்பாளரின் மேசையில்” என்று தனது அனுபவத்தை சொல்லுகிற மதுரன் ரவீந்திரனிடம் அவர் ஆரம்ப வாழ்க்கை பற்றிக் கேட்டேன். “அம்மா வேலணையையும் அப்பா புளியங்கூடலையும் பிறப்பிடமாகக் கொண்டவர்கள்....
Share This:   FacebookTwitterGoogle+

Saturday, March 26, 2016

”ஈழத்து சினிமா” - கோடம்பாக்கத்தின் பிரதியாக்க கனவு !

இலங்கையை பொறுத்தவரை சிங்கள சினிமா ஓரளவு பலமான கட்டமைப்புடன் இயங்க ஆரம்பித்து பலகாலம் ஆகிவிட்டது என்றே சொல்லலாம். குறுகியதொரு பரப்பை களமாக கொண்ட வணிக சினிமாவும் சரி, சர்வதேச பார்வையாளர்களை இலக்காக கொண்ட உலகசினிமாவிலும் சரி சிங்கள சினிமா நன்றாக கால் பதித்துக்கொண்டுள்ளதோடு தொடர்ச்சியான இயக்க நிலையிலும் உள்ளது. தமிழ் சினிமாவின் நிலை என்னவாக இருக்கிறது? புலிகளின் காலத்தில் பிரச்சார...
Share This:   FacebookTwitterGoogle+

Wednesday, March 9, 2016

அழகியலும் வன்முறையும் - பிஞ்சு குறும்படத்தை முன்வைத்து

ஈழத்தமிழர்களிடம் சொல்வதற்கு ஆயிரம் கதைகள் உண்டு, ஆயிரம் சம்பவங்கள் உண்டு. அத்தனையையும் திரை மொழியினூடாக வெளிக்கொணரும்போது எமது மக்களின் வழ்வியலை, அவர்களின் பிரச்சினைகளை உலக அரங்கில் ஆழமாக முன்வைக்க முடியும். லெனின் எம் சிவத்தின் "A Gun and a Ring", சதா பிரணவனின் "God is Dead" மதிசுதாவின் தழும்பு, பிரேம் கதிரின் ஏதிலிகள் ஆகிய குறும்படங்களை உதாரணமாக சொல்லலாம். ஆனால் இந்த முயற்சியின்...
Share This:   FacebookTwitterGoogle+

Saturday, September 5, 2015

With you without you - ஒரு பார்வை !

கடந்த வருடம் வெளிநாடுகளில் திரையிடப்பட்டதிலிருந்து தரமானதொரு சினிமாவாக புத்திஜீவிகளால் கொண்டாடப்பட்டு வந்தத with you without you திரைப்படத்தை நேற்று யாழ் சர்வதேச திரைப்பட விழாவில் பார்க்கமுடிந்தது. தாஸ்தவேஸ்கியின்  குறுநாவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு பிரசன்ன விதானகே இந்த திரைப்படத்தை எடுத்திருந்தார். படம் பார்த்து முடிந்தபோது என்னிடம் ஒரே ஒரு கேள்விதான் இருந்தது. “கொண்டாடுவதற்கு...
Share This:   FacebookTwitterGoogle+

Thursday, August 20, 2015

அஞ்ஞானவாசம், ஏன் இஞ்ச வந்தனி; இரு குறும்படங்கள் பற்றிய பார்வை !

காட்சி ஊடகங்களின் பரிணாமம் காலத்திற்குக் காலம் மாற்றமடைந்து வருவதன் தொடர்ச்சியாக, தற்போதைய சூழலில் மக்களிடையே குறும்படங்களின் தாக்கம் அதிகரித்திருப்பதை அவதானிக்கமுடியும். திரைப்படங்களில் கையாளப்படும் மிகையதார்த்த மாயைகளைத் தவிர்த்து யதார்த்தத்தை முடிந்த அளவு சாத்தியமாக்கியதோடு, திரைப்படங்களில் இருந்து முற்றிலுமாக மாறுபட்ட திரைமொழியையும், செய்தி சொல்லல் உத்தியையும் கொண்டிருந்த...
Share This:   FacebookTwitterGoogle+

Monday, May 11, 2015

மாற்றத்தை நோக்கிய பாதையில் ஈழத்து சினிமா துறை !

இலங்கை தமிழ் சினிமாவின் இன்றைய நிலை என்ன? நேற்று ஆரம்பித்திருக்கும் குறும்பட அலைகளுக்குள் இந்த கேள்விக்கான பதிலை தேடுவது நியாயமில்லை என்பதால் சற்று முன்னோக்கிய நிலவரத்தையும் பார்ப்போம். 90க்கு முற்பட்ட எமது திரைப்படங்கள் எவையும் தற்போது ஆவணப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அதனால் அவற்றை ஆராட்சிக்கு உட்படுத்துவது நமக்கு இயலாத நிலையில் அன்றைய சினிமா ஆர்வலர்களின் தரவுகளையே நாடவேண்டியுள்ளது....
Share This:   FacebookTwitterGoogle+

Friday, May 1, 2015

Food Inc - உணவுப்பழக்கங்கள் மீதான மல்டிநேஷனல் கம்பெனிகளின் ஆதிக்கம் !

இந்த Fast food மோகம் என்றது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரை இரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. சிறுவகள் கூட I Like Fast Food என்று அசால்டாக சொல்லுவார்கள். நம்ம பக்கம், கொழும்பில் என்னமாதிரி என்று தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் 2010 இற்கு பின்னரே KFC மாதிரியான கார்பரேட் கம்பனிகளின் Fast Food கள் கடை விரிக்க ஆரம்பித்தன. இன்றைய நிலையில் யாழ்ப்பாணம் KFC யில் போய் சாப்பிட்டு வருவது...
Share This:   FacebookTwitterGoogle+

Saturday, March 21, 2015

”நிலவில் ஒருவன்” - ராஜ்சிவா !

விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அளவே அறிவியல் எழுத்தாளர்களை கொண்டது தமிழ்மொழி. அவர்களுள் முதன்மையானவர் ராஜ்சிவா தான் என்பது ஒரு சாமானிய வாசகனான எனது கருத்து. அறிவியல் தகவல்கள் அவ்வளவாக அண்டாதிருந்த தமிழ் வாசகப்பரப்பை தனது இலகு தமிழிலான விளக்கங்கள் மூலம் ஆக்கிரமித்துக்கொண்டவர் ராஜ்சிவா. ஹிக்ஸ் போசான், அண்டம், குவாண்டம், கருந்துளைகள், பயிர்வட்டம், பறக்கும்தட்டு, மாயன்கள் என்று நாம்...
Share This:   FacebookTwitterGoogle+

Blog Archive

Followers

Powered by Blogger.
Copyright © 2025 சிறகுகள் |